Breaking News

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் அரசு முறை பயணமாக 7 நாட்கள் இன்று நேபாளம் புறப்பட்டு செல்கின்றனர்.

 


நேபாள அரசு சட்டசபையை காண புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்தது. அதைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபை சார்பில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நேபாளம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் இன்று 1ம் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்று, அங்கு தங்குகின்றனர்.மறுநாள் 2ம் தேதி டில்லியில் இருந்து விமானம் மூலம் நேபாளம், காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.

இந்த பயணத்தில் சபாநாயகர் செல்வம் தலைமையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அனைத்து எம்.எல்.ஏ.க்கள் செல்ல டிக்கெட் போடப்பட்டுள்ளது. தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது நேபாளம் செல்லும் சில எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் மனைவியை அழைத்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!