Breaking News

விண்வெளியில் ஒரே நேர்கோட்டில் வந்த 7 கோள்களை தொலைநோக்கி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.

 


புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மன்றம் சார்பில், பொதுமக்கள் விண்வெளியில் ஏழு கோள்களை பார்ப்பதற்கு நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தனர்.இரவு 7:00 மணிக்கு, ஒரே நேரத்தில் தெரியும் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, புதன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில், புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மன்றம், அப்துல்கலாம் மையம் மற்றும் கோளரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி பொதுமக்கள் நேற்று இரவு ஏழு கோள்களையும் தொலைநோக்கி மூலம் பார்த்து சென்றனர்.

No comments

Copying is disabled on this page!