ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படும் மாணவ - மாணவியர் விடுதிகளில் துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் இளங்கோவன் திடீர் ஆய்வு..
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் 14 மாணவர் - மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான அட்டவணை இன மற்றும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மாணவ - மாணவியர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் துறை செயலர் டாக்டர் முத்தம்மா, இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் காலாப்பட்டு, கிருஷ்ணா நகர், கொசப்பாளையம், தட்டாஞ்சாவடி, வில்லியனூர் உட்பட புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் 14 மாணவ-மாணவியர் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாணவ மாணவிகள் தங்கும் அறை, சமையலறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து மாணவ மாணவிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.
பெரும்பாலான மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இரவு நேரத்தில் அரிசி உணவிற்கு பதிலாக, இட்லி,சப்பாத்தி போன்ற டிபன் வழங்க வேண்டும் என்றும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தங்கம் அறையை தயார் செய்ய வேண்டும் என விடுதி காப்பாளர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.
இந்த ஆய்வின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
No comments