Breaking News

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால், அதிக லாபம் பெறலாம் என தொழிலதிபர்களை குறிவைத்து ரூபாய் 10 கோடி வரை மோசடி. பட்டதாரி இளைஞர் கைது..

 


புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் நகர பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாத்திர கடை நடத்தி வருகிறார். இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் சற்று ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் குட்வில் என்கிற வர்த்தக நிறுவனத்திடம் பேசி, ஆன்லைன் வர்த்தகத்தில் சிறுக சிறுக ரூபாய் 1 கோடியே 69 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, தனது ஆன்லைன் வர்த்தக கணக்கில் பணம் இல்லையென தெரிந்தவுடன் குட்வில் நிறுவனத்திற்கு தொடர்புகொண்டபோது எதிர் தரப்பில் இருந்து சரியான பதில் வராததால், அதிர்ச்சியடைந்த சரவணன், இது தொடர்பாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகம் மூலமாக சரவணனிடம் மோசடியில் ஈடுப்பட்டது, புதுச்சேரி ஐயங்குட்டிபாளையம் பகுதியை சேர்ந்த செளந்தரராஜன் என தெரியவர, திருப்பூரில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த போலீசார், புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை செய்ததில், செளந்தரராஜன் போலி ஆன்லைன் நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களிடம் ரூபாய் 10 கோடிக்கு மேல் மோசடி செய்து, அப்பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும், சில சொத்துக்கள் வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. 

இதனைடுத்து கைது செய்யப்பட்ட செளந்தரராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார், அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் அவருடன் தொடர்புடைய சிலரை கைது செய்ய உள்ளதாகவும், செளந்தரராஜன் ஏமாற்றிய பணத்தில் வாங்கிய சொத்துக்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!