Breaking News

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் உதவி ஆய்வாளர் அஷ்டமூர்த்தி மற்றும் போலீசார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போக்குவரத்து விழிப்புணர் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

அப்பொழுது மாணவர்கள் சாலையில் நடந்து சென்றாலும் அவரது பெற்றோர்கள் வாகனங்கள் ஓட்டி சென்றாலும் இடது பக்கமாக நடந்து செல்ல வேண்டும் என்றும் இடது பக்கமாக வாகனங்களை ஓட்டி செல்ல பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தனர் மேலும் தாறுமாறாக வாகனம் ஓட்டினால் அதனால் விபத்து ஏற்படும் பட்சத்தில் விபத்துக்குள்ளானவர்களை எளிதில் காப்பாற்ற முடியாது என்றும் அதனால் சாலை விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்ட மாணவர்கள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!