Breaking News

மயிலாடுதுறையில் ஆளுநரை கண்டித்து திமுக போராட்டம்..

 


தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் அருகில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை நகர செயலாளர் தலைவர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும் அவரை காப்பாற்றும் அதிமுக -பாஜக கள்ளக் கூட்டணியையும் கண்டித்து  தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் ஆளுநர் வெளியேற வேண்டும், ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்காத எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!