ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா..!
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான வானூர் அருகே உள்ள நைநார்மண்டம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் தமிழர் திருநாள் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது.
பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புது பானையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து கோவில் அருகில் பொங்கல் வைக்கப்பட்ட பின் படையலிடபட்டு ஆண்கள் மட்டுமே உண்பார்கள்.
இந்தப் பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களது விவசாயம் மட்டுமல்லாது கால்நடைகளும் மற்றும் தலைமுறைகள் தழைத்தோங்கவும் இவ்விதம் செய்கின்றனர். இந்த நேரத்தில் பெண்கள் வீட்டில் இருப்பார்கள் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
No comments