மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுரு சிலைக்கு கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை..
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன்,முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்,லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
No comments