Breaking News

சிவகங்கை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசிய விழிப்புணர்வு நடைபயணம் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பாக 155 வது காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் தலைமையில் மாபெரும் இந்திய தேசிய விழிப்புணர்வு நடைபயணம் சிவகங்கை பிரதான நகர் பகுதிகளில் நடைபெற்றது. 

இதில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் திரு ஏ. சி. சஞ்சய் காந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் சி. ஆர். சுந்தர்ராஜன் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்டம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு து. ஜ. பால் நல்லதுரை, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு ராஜீவ் கண்ணா, சிவகங்கை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் திரு சையது இப்ராஹிம், சிவகங்கை மாவட்ட நகர வட்டார பேரூர் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!