Breaking News

பணி உயர்வு வழங்காத மாவட்ட திட்ட அலுவலரை கண்டித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்.


சிவகங்கை மாவட்டத்திட்ட அலுவலகத்தில், பணி உயர்வு வழங்காத மாவட்ட திட்ட அலுவலரை கண்டித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம். 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலச் செயலாளர் பாக்கியமேரி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்  5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மினி மைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடாத திட்ட அலுவலர் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தமிழக முழுவதும் 5 மாவட்டங்களில் பணி உயர்வு வழங்காத தமிழக அரசை கண்டித்தும் 100 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பதவி உயர்வுக்கு நடவடிக்கை எடுக்காத மாவட்ட திட்ட அலுவலர் மாரியப்பன் உட்பட இதற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

No comments

Copying is disabled on this page!