பூந்தமல்லியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1 கோடி இழந்தவர் தூக்கு போட்டு தற்கொலை.
பின்னர் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் பல பேரிடம் கடன் வாங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் அவருக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்துள்ளார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இவரது சொத்துக்களை விற்று கடனை அடைத்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் எப்படியாவது பணக்காரனாகி சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் பலரிடம் கடன் வாங்கி மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவருக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் அவரை அவரிடம் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் வினோத்குமார் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரது பெற்றோர் நேற்று இரவு ராமேஸ்வரம் செல்வதற்காக சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர். அவரது மனைவியும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக வினோத்குமார் மட்டும் இருந்துள்ளார். அப்போது இவருக்கு ரூ. 15 லட்சம் கடன் கொடுத்த பூந்தமல்லி சேர்ந்த ஒருவர் தொடர்ந்து போன் செய்துள்ளார் . இதனால் மன வேதனையுடன் இருந்து வந்த அவர் வீட்டில் மனைவியின் புடவையை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் வினோத் குமார் தூக்கில் தங்கிய நிலையில் இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரது பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது ராமேஸ்வரம் செல்ல இருந்த அவர்கள் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திரும்பி வந்து மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் வினோத்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments